×

பணி நிறைவுபெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

நாகப்பட்டினம், ஏப்.30: தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா மற்றும் தமிழ்நாடு மாநிலக் கல்வி கொள்கை உருவாக்க குழு உறுப்பினருக்கு பாராட்டு விழா நாகப்பட்டினம் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டித்தில் நடந்தது. கிருஷ்ணவேணி, ஆனந்தராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். பணிநிறைவு செய்யும் ஆசிரியர்கள் அன்பழகன், ராஜ்குமார், செல்வராஜ், நாகேஷ், சிவகுருநாதன், மங்கையர்க்கரசி, மேரி சகாயராணி, வளர்மதி ஆகிய ஆசிரியர்கள் பாராட்டு பெற்றனர்.

தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை உருவாக்க குழு உறுப்பினர் பாலு பணி ஓய்வு பெற்றார். இவர்கள் அனைவரும் பாராட்டப்பெற்றனர். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலச் செயலாளர் வீரமணி, மாநிலத் துணைத்தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட செயலாளர் சித்ரா, இணை செயலாளர்கள் காந்தி, இருதயராஜ், ராஜம் மற்றும் பலர் பேசினர். நாகப்பட்டினம் மாவட்ட தலைவர் பாலு நன்றி கூறினார்.

The post பணி நிறைவுபெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Tamil Nadu Primary School ,Teachers' ,Alliance ,Tamil Nadu State Education Policy Development Committee ,Nagapattinam Government ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில்...